அரியர்ஸ் தேர்வு விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) நடைமுறைபடியே செயல்படுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனாவுக்கு தமிழகத்தில் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால், இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக கூறினார். அரசு அறிவித்த வழிகாட்டுதலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும் கூறினார். நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் எண்ணம் என்றும், நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர், உயர்கல்வி அமைச்சர் ஏற்கெனவே தமிழக அரசின் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டதாக தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழுவின் நடைமுறைபடியே தமிழக அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார். கொரனோ பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு வந்த பிறகே பெற்றோர்களின் மனநிலையை ஆராய்ந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.