காய்கறிகளை வைத்து விதவிதமான சிப்ஸ் தயாரிக்கும் செய்முறையை இங்கே காண்போம்.
காய்கறிகளை எப்போதும் போல் சமைத்து சாப்பிடுவதை விட விதவிதமாக தயாரித்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். சில காய்கறிகளை சிப்ஸ் போல் தயாரித்தும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கான சரியான தேர்வு இந்த சிப்ஸ் வகைகளாகதான் இருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிட்டிருப்போம். தற்போது சற்று வித்தியாசமாக மற்ற காய்கறிகளை பயன்படுத்தியும் இதனை தயாரிக்கும் செய்முறையை பார்ப்போம்.
பாகற்காய் சிப்ஸ்:
கடைகளில் இந்த சிப்ஸ் அதிகம் கிடைக்கும். அதனை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். பாகற்காயை வட்டமாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து பிசைந்து சில நிமிடங்கல் ஊறவிடவும். அதன்பிறகு தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி உலர வைத்தால் அதில் உள்ள கசப்புத்தன்மை நீங்கிவிடும். இந்த பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், பூண்டு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதன்பிறகு எண்ணெயில் பாகற்காயை பொறித்து எடுக்கவும். சுவையான பாகற்காய் சிப்ஸ் சாப்பிட்டு மகிழுங்கள்.
பீட்ரூட் சிப்ஸ்:
பீட்ரூட்டை நன்றாக கழுவி மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, மிளகு, மஞ்சள், உலர்ந்த மாங்காய் தூள், மிளகாய் தூள் சேர்த்து தடவிக் கொள்ளவும். பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, பீட்ரூட்டை சேர்த்து வறுத்து எடுக்கவும். பீட்ரூட்டில் வைட்டமின் ஏ, துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. அதனால் பீட்ரூட்டை அப்படியே சமைத்து சாப்பிட விரும்பாதவர்கள், சிப்ஸ் தயாரித்து சாப்பிடுங்கள்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்வது சுலபம்தான். இதனை நன்றாக கழுவி, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை சில நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். இது உலர்ந்தவுடன், மிளகாய் தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். இது நன்றாக மொறுமொறுப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால், சோள மாவு சேர்த்துக் கொள்ளலாம். அதன்பிறகு எண்ணெய் சேர்த்து வறுத்தெடுத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.