10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 23-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி அல்லது தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தேர்வர்களும் பெற்றோர்களும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று (அக்.14) முதல் நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.