அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நவ. 1 முதல் இலவச நீட் பயிற்சி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் இலவச நீட் பயிற்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு பின்னர் பல்வேறு எதிர்ப்புக்கிடையே கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியாகின.
கடந்த முறை தேர்வு முடிவில் அரசுப்பள்ளி மாணவர்கள் பெரிதாக வெற்றி பெறாத சூழ்நிலையில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 1,615 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து, அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி தொடங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கோவை தனியார் அமைப்பும் சேர்ந்தது 2021 நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.