1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பெற்றோர் - அதிகாரிகள் அதிர்ச்சி

 இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தொற்று பரவல் இன்னும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.  இந்தியாவில்  கடந்த  24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஐந்து மாத காலம் பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் தொற்று குறையவில்லை. ஆனாலும் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் பள்ளிக்கு சந்தேகம் கேட்க பெற்றோர் அனுமதியுடன் செல்லலாம் என மத்திய அரசு கூறியது.

இந்நிலையில் நவம்பர் 2 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக விஜயநகர் மாவட்டத்திலுள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பள்ளிகளில் நடந்த முறைசாரா வகுப்புகளில் பங்கேற்ற பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் சென்றதாக தெரிகிறது.

பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பள்ளிகளில் எடுத்து இருந்த போதிலும் மாணவர்கள் வேறு இடங்களில் கொரோனா தொற்றால் பாதித்திருக்கலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags