ஆரம்பப்பள்ளி மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டத்திலுள்ள திம்மாபூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் வேளையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டம் திம்மாபூர் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் கல்வி சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியகாமா என்ற திட்டம் அரசு சார்பாக தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் படி பெலகெவி மாவட்டத்தில் 195 மாணவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பாடம் கற்றனர். அதில் 34 மாணவர்களுக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 6 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. மாணவர்கள் அனைவரும் 3 அல்லது 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக உள்ளனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கொரோனா பரவியதையடுத்து வித்யகாமா திட்டத்தை மறு உத்தரவு வரும் வரை மாநில கல்வித்துறை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.