தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் ஓராண்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு
“தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டயம் (Civil, EEE & ECE)) ஆகிய பிரிவுகளில் துறைகள் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன.
மேலும், விவரங்களுக்கு www.boat-srp/com எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் நவம்பர் 15 /2020 ஆகும்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.