பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்
மருத்துவத் துறைக்கு உதவும் துணைப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிஎஸ்சி நர்சிங், ரேடியோதெரபி டெக்னாலஜி, ரேடியோகிராபி, அனஸ்தீசியா, கார்டியாக், கண் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், பி. பார்ம், பிபிடி,(இயன்முறை மருத்துவம், பிஓடி, பிஏஎஸ்எல்பி, (செவித்திறன் பேச்சு மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு) உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.10.2020.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
செயலர்,
தேர்வுக்குழு,
162, பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை.10.
என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:-
http://pmc.tnmedicalonline.xyz/Default.html
மேலும் தகவல் அறிய,
http://tnhealth.tn.gov.in/online ”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.