வாய்ப்புண்,வாய் நாற்றம் ஆகியவற்றை போக்க சிறந்த கீரை இதுதான்.
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற சத்துகளும் மிகுந்த மருத்துவ குணங்களும் உள்ளன. இந்தக் கீரையினை தொடர்ந்து உட்கொண்டால் மேனியானது பொன் போல ஜொலிக்கச் செய்யும். ஏழைகளின் தங்க பஸ்பம் என்று அழைக்கப் படுகிறது.
பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்:
பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பார்கள். கண்பார்வை கூடுமாம். அந்த அளவிற்கு இதில் சத்துக்கள் உள்ளன என்பார்கள்.
மிளகும், உப்பும் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்தாகும்.
பாசிபருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுதூள் ஆகியவற்றை சேர்த்து கடைந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
துவரம் பருப்பு, நெய்யுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவற்றை குணப்படுத்தும்.
கூந்தல் நன்றாக வளர பொன்னாங்கண்ணி கீரையின் சாற்றை தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம்.
500 கிராம் பொன்னாங்காணி கீரையுடன், 100 கிராம் வெங்காயமும், 6 பல் பூண்டும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.