WIFI டெபிட் கார்டுகளை வைத்து ரூ.10 லட்சம் மோசடி
சென்னையில் WIFI டெபிட் கார்டுகளை வைத்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த அரி விஸ்வநாத், கடந்த மாதம் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஜூலை மாதம் Wifi டெபிட் கார்ட்டு தொலைந்து விட்டதாகவும், அதை பயன்படுத்தி 15 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த புகார் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கே.கே. நகரை சேர்ந்த சரவணன் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், சரவணன் புதிதாக தொழில் தொடங்கப்போவதாக தனது நண்பரின் பெயரில் ஸ்வைப்பிங் மெஷின் வாங்கி உள்ளார்.
பின்னர் ஒவ்வொரு ஏடிஎம் மையங்களுக்கும் சென்று வாடிக்கையாளர்கள் மறதியில் விட்டுச் சென்ற வைபை டெபிட் கார்டுகளை எடுத்து வந்து, ஸ்வைப்பிங் மெஷினில் ரகசிய குறியீடு எண் இல்லாமல் ஒருமுறைக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் வீதம் எடுத்து வந்துள்ளார். இவ்வாறு இதுவரை 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. சரவணனிடம் இருந்து 12 வைபை ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தனது நான்கு வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக இந்த மோசயில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.