" அடிக்கடி தலைவலியால் அவதிப்படுவோர் இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.
தேவையான பொருள்கள்
அதிமதுரம் - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
செய்முறை
முதலில் அதிமதுரம் மற்றும் சீரகத்தை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய அதிமதுரம் மற்றும் சீரகத்தை ஒன்றாக கலந்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.பயன்கள்இந்த சூரணம் அடிக்கடி உண்டாகக் கூடிய தலைவலியைக் குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் சாப்பாட்டிற்கு பின்பு தலா இரண்டு கிராம்அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.