Home »
» கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு: புதிய விதிமுறைகள் என்னென்ன?
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு: புதிய விதிமுறைகள் என்னென்ன?
.
|
| அக்டோபர் 1 முதல், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை பாதுகாப்பதற்காக புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி ஏற்கானவே ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யாத கார்டுகளில் புதிய ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யமுடியாது. இனி அவர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை வசதி வேண்டுமெனில், அவர்கள் வங்கியை அணுக வேண்டும்
| மேலும் இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இயல்புநிலையாக எந்த சேவைகளும் கிடைக்காது. அதனால் அட்டைதாரர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பர்வர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் தேவைப்பட்டால் அவர்கள் வங்கியை அணுகி, இந்த சேவைகளை தங்கள் அட்டைகளில் செயல்படுத்துமாறு கோர வேண்டும்.அட்டைதாரர்கள் தங்கள் வங்கி பயன்பாடுகள், செயலி பயன்பாடுகள், கார்டு பயன்பாடுகள் மற்றும் ஏடிஎம்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய அனைத்து வங்கிகளும் 24x7 சேவையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
|
|
|
| புதிய வழிகாட்டுதல்களின்படி அட்டை பயனர்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை சுவிட்ச் ஆப் மற்றும் சுவிட்ச் ஆன் செய்யலாம். சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பர்வர்த்தனைகளுக்கான செலவு வரம்புகளை தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் ஏடிஎம் பரிவர்த்தனைகள் போன்ற சில அம்சங்களிலிருந்து கூட அவர்கள் விலகலாம்.
|
| ஆபத்து என்றால் வங்கிகள் நடப்பு அட்டைகளை செயலிழக்கச் செய்யலாம், புதிய அட்டைகளையும் வழங்கலாம். அட்டைதாரர் இந்தியாவுக்கு வெளியே கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் சர்வதேச பரிவர்த்தனைகளை செயல்படுத்த வங்கியின் அனுமதி பெறவேண்டும் |
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.