இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் வாரம் ஒருமுறை தொழிற்பயிற்சிகளை பெண்களுக்காக கட்டணமில்லாமல் நடத்தி வருகிறது. ஆன்லைன் மூலமாக ‘பயிற்சி வளர்ச்சி’ என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த வாரம் வீட்டில் இருந்தபடியே சாக்லேட் தயாரிப்பது எப்படி? என பயிற்சி வழங்கப்படும்.
வீட்டிலேயே தயாரிப்பதால் சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும் இந்த சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கு தரலாம். அதுமட்டுமில்லாமல் இதற்கான மூலப்பொருட்களை குறைந்த விலையில் எங்கு வாங்குவது? போன்றவையும் தெரிவிக்கப்படும்.
தயாரிக்கும் பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் மேலும் இதற்கான ஆர்டர்களை எங்கு வாங்கலாம்? என்பது பற்றிய தகவல்களும் அளிக்கப்படும்.
இந்த பயிற்சியானது 11-ந் தேதி(இன்று) மாலை 3 மணிமுதல் 4.30 மணிவரை ஆன்லைன் மூலமாக அளிக்கப்படும். தங்களுடைய ஆன்டிராய்டு செல்போனில் இந்த பயிற்சியை form.wewatn.com/ ஐ.டி. எண். 86231288454 என்பதன் மூலமாக நேரடியாக கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.