தண்ணீரில் ஓட்டிச் செல்லும் வகையில் சைக்கிள்: கீழக்கரை சகோதரர்களின் புதிய கண்டுப்பிடிப்பு!
ராமநாதபுரம் அருகே கீழக்கரையைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பதற்காக தண்ணீரில் மிதக்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த இரட்டையர்கள் நசுருதீன், அசாருதீன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர். பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் வகையில் தண்ணீரில் மிதக்கும் சைக்கிளை தயாரித்துள்ளனர்.
இதற்காக 12 தண்ணீர் கேன்கள், இரும்பு கம்பிகள், சைக்கிள் சக்கரங்கள், இயந்திரப்படகுகளில் இருப்பது போன்ற புரோப்பல்லர் கொண்டு சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம், தண்ணீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதில் 180 கிலோ எடை வரை கொண்டு செல்லலாம். இந்த மிதவை சைக்கிள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். கடல் மற்றும் குளங்களில் மூழ்குபவர்களை மீட்கும் பணிக்கு இந்த சைக்கிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.