கட்டாய முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன என நீதிபதிகள் வினாவினர்.
அதே சமயம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது விதக்கப்படும் அபராத தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தினால் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். தொற்று ஏற்பட்டால் தன் குடும்பத்தினர் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து, பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க, வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.