நடப்பாண்டில் நடைபெறும் பொது தேர்வுகளில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களில் இருந்து அதிகளவு கேள்விகள் கேட்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பகடந்த மார்ச் 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. மாணவர்களுக்கு வகுப்புகள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழக அரசால் கல்வித் தொலைக்காட்சி சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் ஒவ்வொரு பாடங்களையும் கால அட்டவணைப் படி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தகுந்த ஆசிரியர்களை கொண்டு பாடத்திட்டங்கள் விளக்கப்படுகிறது. மேலும் வீட்டில் இருக்கும் மாணவர்களிடையே கல்வி தொலைக் காட்சி மூலமாக சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொற்றோரின் அனுமதியுடன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கு மட்டும் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த சூழலில், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் சுமார் 27 லட்சம் மாணவர்கள் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத இருக்கின்றனர். ஆன்லைன் மூலம் வகுப்புகள எடுக்கப்பட்டாலும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் பாடங்களை கவனித்து தேர்வு தயாராகும் வண்ணம் இருக்க மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் அதிகப்படியான கேள்விகள் கல்வி தொலைக்காட்சியில் இருந்து கேட்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.