கொரோனா தொற்றுள்ள குழந்தைகளை, மிஸ்-சி., என்ற புதிய நோய் தொற்று தாக்கி வரும் நிலையில், இது தொடர்பான கண்காணிப்பை சுகாதார துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குழந்தைகளை கொரோனா தாக்காமல், பத்திரமாக கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகளே திணறி வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதித்த குழந்தைகளை, மிஸ்-சி., என்ற புதிய வைரஸ் நோய் தொற்று தாக்கி வருவது கண்டறியப்பட்டது.
சென்னையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு நடத்தியது. ஆய்வில், சென்னை மற்றும் மதுரையில் கொரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு, மிஸ்-சி., வைரஸ் தொற்றின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பை போல, காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகளுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி, உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடியது என அறிவுத்தியுள்ளது. சென்னை, மதுரையில் இப்புதிய வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளதால், கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த குழந்தைகளை, சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மாவட்ட சுகாதார துறையினர் கூறுகையில், 'கோவையில் இதுவரை மிஸ்-சி., வைரஸ் பாதிப்பு, எங்கும் பதிவு செய்யப்பட வில்லை. கோவை மாவட்டம் முழுவதும், கடந்த 10ம் தேதி வரை, 939 ஆண் மற்றும் 836 பெண் குழந்தைகள் என இதுவரை, 1,774 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இவர்களின் உடல்நிலை குறித்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் உடல்நிலையில், ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றனர்.
கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை, 40 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு, மிஸ்-சி., வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், கவலைப்படத்தேவையில்லை. சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
சென்னை, மதுரையில் இப்புதிய வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால், கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த குழந்தைகளை, சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுதான் அறிகுறி!
''கொரோனா பாதித்து குணமடைந்த குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, கண் சிவந்து காணப்படுதல், திடீர் மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.