இந்தியாவின் முன்னாள் குடியரசுத்துத்தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளான இன்று சர்வதேச மாணவர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் குடியரசுத்தலைவருமான அப்துல் கலாம் தன் வாழ்நாளின் பெரும்பங்காக மாணவர்களுக்காக செயலாற்றியுள்ளார். வாழ்நாள் முழுக்க மாணவர்கள் மத்தியில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய இவரது பிறந்த நாள் ஐநா சபையால் 2010ஆம் ஆண்டு உலக மாணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக மாணவர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
விஞ்ஞானி, ஆசிரியர், எழுத்தாளர் மட்டுமின்றி இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் ஐ கௌரவிக்கும் வகையில் இந்த உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ராமேஷ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம் இயற்பியல் மற்றும் விண்வெளி பொறியியல் பயின்றார். அதன் பின்னர் சுமார் 40 ஆண்டுகள் விஞ்ஞானியாகவும் அறிவியல் நிர்வாகியாகவும் டிஆர்டிஒ மற்றும் இஸ்ரோவில் பணியாற்றினார்.
ஆனால் மாணவர்களுக்கு கற்பிப்பதையே தனது விருப்பமாக கொண்டிருந்த அவர் உலகம் தன்னை நினைவில் கொள்ள வேண்டும் என விரும்பினார். அவர் விரும்பியதை போலவே அவரது மரணமும் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது நிகழ்ந்தது. ஷில்லாங்கில் ஐஐஎம் மாணவர்களுக்கு உரையாற்றும்போது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி உயிரிழந்தார்.
சர்வதேச மாணவர்கள் தின இந்த ஆண்டு கருப்பொருள்:
கல்வி என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மேலும் கல்வி பூமி, செழிப்பு, அமைதியை கற்பிக்க வேண்டும் என 2020 ஆண்டு உலக மாணவர்கள் தின கருப்பொருளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 3 புத்தகங்களை எழுதியுள்ள டாக்டர் அப்துல் கலாம் பத்ம பூஷண், பத்ம விபூஷன், பாரத் ரத்னா, வீர் சாவர்க்கர் விருது, ராமானுஜன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஏவுகணை வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான பணிக்காக அவர் 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.