பாசிப்பயறை ஏன் ஊறவைத்து சாப்பிட வேண்டும் தெரியுமா?
அடடா… இவ்வளவு அற்புதங்கள் இருக்கிறதா?
புரதங்கள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளில் ஒன்று பாசிப்பயறு. நம் இந்திய சமையலில் இந்த பருப்பு மிகவும் புகழ் பெற்றது. மற்ற பருப்புகளை ஒப்பிடும் போது பாசிப்பருப்பு உங்களுக்கு அதிகளவு புரோட்டீன்கள் நிறைந்த ஒன்று. வெறும் 100 கிராம் பாசிப்பருப்பில் 3 கிராம் அளவிற்கு புரோட்டீன்கள் காணப்படுகின்றன. எனவே இந்த பாசிப் பருப்பை உங்க அன்றாட உணவில் சேர்த்து வருவது உங்களுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
கோலிசிஸ்டோகினின் ஹார்மோனின் செயல்பாட்டை மேம்படுத்த பாசிப் பருப்பு உதவுகிறது. இதை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு பசிக்காது. வயிறு நிரம்பிய எண்ணத்தை ஏற்படுத்தும். முக்கியமாக உங்க எடையை கட்டுக்குள் வைக்க பாசிப் பருப்பு உதவும்.
இந்த மஞ்சள் அல்லது பச்சை பருப்பில் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
பாசிப்பயிறை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.!!
இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்பில் இருந்து உங்களை காக்கும்.
ஒழுங்கற்ற இதயத்துடிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இது எளிதில் சீரணிக்க கூடியது என்பதால் உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.
இந்த பாசிப் பருப்பில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அடங்கி உள்ளன.
பாசிப்பருப்பு குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது உடலில் உள்ள இன்சுலின், இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, மேலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது..
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.