அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக அக்.10 முதல் அக். 20 வரை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ.2, விண்ணப்பக் கட்டணம் ரூ.58 சோ்த்து ரூ.60 செலுத்தப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.
மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை அக்.15 முதல் அக்.20 வரை இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி பதிவேற்றலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சோ்க்கை எண்ணிக்கை விவரங்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.
இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவா்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28276791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.