தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுமா? உண்மை என்னனு தெரிஞ்சுக்கோங்க...!
தக்காளி ஒவ்வொரு இந்திய உணவு வகைகளிலும் இன்றியமையாத பகுதியாகும். உங்கள் உணவுகளில் அதன் துண்டுகளை வைத்தாலும் அல்லது உங்கள் சமோசாக்களுடன் தக்காளி சாஸ் வைத்திருந்தாலும், அதன் தனித்துவமான சுவை நீங்கள் வைத்திருக்கும் எந்த உணவிற்கும் கூடுதல் சுவையை சேர்க்கிறது.
அதன் சுவைகளுக்கு மட்டுமல்ல, தக்காளி அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கத்திற்கும் பெயர் பெற்றது. வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஃபைபர் மற்றும் புரதம் ஆகியவற்றின் நன்மைகள் நிறைந்துள்ள இந்த சிவப்பு சிட்ரிக் பழத்தில் ஏராளமான நிரூபிக்கப்பட்ட சுகாதார நன்மைகள் உள்ளன.
தக்காளி கண்பார்வைக்கு நல்லது, நீரிழிவு சிக்கல்களைக் குறைக்கிறது. மேலும், சூரிய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. அப்போதும் கூட தக்காளி சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பழம் மற்றொரு நோய்க்கு வழிவகுக்கும் என்பது உண்மையில் சாத்தியமா? இக்கட்டுரையில் இதைப் பற்றிய உண்மைகளை காணலாம்.
கால்சியம் கற்கள்..
பல வகையான சிறுநீரக கற்கள் உள்ளன. மிகவும் பொதுவான ஒன்று கால்சியம் கற்கள். நமது சிறுநீரகங்களில் அதிக அளவு கால்சியம் ஆக்சலேட் படிவதால் இந்த கற்கள் உருவாகின்றன. ஆக்ஸலேட் என்பது இயற்கையாகவே உருவாகும் ஒரு பொருளாகும். இது பல்வேறு வகையான காய்கறிகளிலும் பழங்களிலும் காணப்படுகிறது.
தக்காளியும் சிறுநீரக கல்லும்..
நமது கல்லீரல் கூட தினமும் குறிப்பிட்ட அளவு கால்சியத்தை உற்பத்தி செய்கிறது. நமது எலும்புகள் மற்றும் தசைகள் இரத்தத்தில் இருந்து கால்சியத்தை உறிஞ்சிவிடுகின்றன. ஆனால் இந்த ஊட்டச்சத்தின் அளவு இரத்தத்தில் அதிகமாக இருக்கும்போது, அது சிறுநீரகத்திற்கு சிறுநீரில் வெளியேற்றப்பட வேண்டும்.
சில நேரங்களில் சிறுநீரகங்களால் உடலில் இருந்து அதிகப்படியான கால்சியத்தை அகற்ற முடியாது. இது படிப்படியாக குவியத் தொடங்கி கல்லாக மாறும். தக்காளியில் அதிகளவு ஆக்சலேட் உள்ளது. எனவே, இது சிறுநீரக கற்களை உருவாக்குவதோடு இணைக்கப்பட்டுள்ளது.
உண்மை..
உங்கள் உணவில் தக்காளியைச் சேர்ப்பதை நீங்கள் விரும்பினால், இந்த கட்டுக்கதை காரணமாக நீங்கள் தக்காளி சேர்ப்பதை நிறுத்தக்கூடாது. தக்காளியில் ஆக்சலேட் உள்ளது. ஆனால் அதன் அளவு மிகவும் குறைவாக உள்ளது மற்றும் சிறுநீரக கல் உருவாக வழிவகுக்காது. 100 கிராம் தக்காளியில் 5 கிராம் ஆக்சலேட் மட்டுமே உள்ளது. தக்காளி மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றால், சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் நுகர்வு முழுவதுமாக விலகுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள்.
ஆக்சலேட் உட்கொள்ளலை குறையுங்கள்..
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், சிறுநீரக பிரச்சினை இல்லை என்றால் நீங்கள் விரும்பும் அளவுக்கு தக்காளியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நீங்கள் சிறுநீரக தொடர்பான சில சிக்கல்களைக் கையாளுகிறீர்கள் என்றால், உங்கள் ஆக்சலேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். கீரை, பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றிலும் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது. இந்த காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக சுத்தம் செய்து, வேகவைத்து சமைக்கவும்.
சிறுநீரக கற்களைத் தடுக்கக்கூடிய விஷயங்கள்..
சில குறிப்பிட்ட காய்கறிகள் அல்லது பழங்களை சாப்பிடாமல் இருப்பதால் உங்களுக்கு ஒருபோதும் சிறுநீரக கற்கள் ஏற்படாது என்பதற்கான உறுதியளிக்க முடியாது. அதனால், அதற்கு மாறாக ஆபத்தை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களை இங்கே காணலாம்.
செய்ய வேண்டியவை..
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இது உங்கள் சிறுநீரகம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
சோடியம் உட்கொள்ளலைக் குறைக்கவும். உணவில் தாவர புரதத்தை சேர்க்கவும்.
உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்தவிதமான கூடுதல் மருந்துகளையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.