அதிக கட்டணம் வசூலிப்பதாக 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பெரியார் - அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் திருஉருவ சிலைக்கு, செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிக்கட்டணத்தைப் பொறுத்தவரை சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கட்டண முறை பொருந்தும் என்றும் கூறினார். பெற்றோர்கள் மாணவர்களின் மன நிலை மற்றும் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என கூறிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், பொருளாதார சூழல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் இரண்டாம் பருவநிலை பாடத்திற்கான பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.