துளசி இலைகளை மென்று சாப்பிடலாமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், அதில் உள்ள மெர்க்குரியால் பற்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
துளசியில் இயற்கையிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இருமல், சளி, காய்ச்சல் என அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை அதிக அளவில் மென்று சாப்பிட்டால் சில பிரச்சனைகளும் ஏற்படும். இதில் உள்ள மெர்க்குரி, பற்களில் உள்ள எனாமலுக்கு நல்லது கிடையாது. இதனை மென்று சாப்பிடும் போது, பற்கள் சேதமடையவோ அல்லது நிறம் மாறவோ வாய்ப்புள்ளது.
அதனால் இதனை நேரடியாக மென்று சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனை டீ, ஜூஸ் என வேறு வழிகளில் தயாரித்து எடுத்துக் கொள்ளலாம்.
துளசி டீ:
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சுமார் 10 துளசி இலைகளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றையும் கலந்து கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது.
துளசி- நெய்:
துளசி இலைகளை காய வைத்து தூளாக்கிக் கொள்ளவும். 1 டீஸ்பூன் துளசி பவுடருடன், 2 டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதனை தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
துளசி ஜூஸ்:
ஒரு கப் தண்ணீரில் 10 முதல் 15 துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு மற்றும் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். இதனை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து, வடிகட்டி குடிக்கவும்.
துளசி இலைகளை மென்று சாப்பிடாமல், இப்படி தயாரித்து சாப்பிட்டால் பற்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.