1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தாமிர பாத்திரத்தில் நீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா?

 

Image

தாமிர பாத்திரங்களில் நீர் அருந்துவது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகுக்கும்.

கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் அருந்துவதை விட தாமிர குடங்கள் மற்றும் பாட்டில்களை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. இதில் வைத்து நீர் அருந்தும் போது நமது உடலுக்கு சில ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். பழங்கள், காய்கறிகள், கீரைகள் என சத்தான உணவுகளை சாப்பிடும் போது கிடைக்காத சில பலன்கள் கூட தாமிரத்தால் உங்களுக்கு கிடைக்கும். இதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தற்போது பார்ப்போம்.

குளிர்ச்சி:
நாம் உண்ணும் பெரும்பாலான உணவு வயிற்றில் அமிலமாக மாறிவிடுகிறது. அதனால் தாமிரத்தால் ஆன பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்தும் போது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். இது இயற்கையிலேயே காரத்தன்மை கொண்டது. அதனால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தி விடுகிறது. உடல் சூட்டை தணிக்க விரும்புவர்கள் கண்டிப்பாக இதனை தேர்வு செய்யுங்கள். 


ரத்த சோகை:
உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும் தாமிரம் அவசியம். உயிரணு உருவாக்கம் முதல் இரும்புச்சத்தை உறிஞ்சும் தன்மை வரை இதன் பங்கு முக்கியமானது. இதில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதன் மூலம், ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு:
இதில் வலுவான ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் பண்பு இதற்கு உண்டு.

2

நோயெதிர்ப்பு சக்தி:
நமது உடலை வைரஸ், பாக்டீரியா உள்ளிட்டவைகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். தாமிரத்தில் வைரஸ், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

இதய ஆரோக்கியம்:
ரத்த அழுத்தம், அதிகப்படியான இதயத் துடிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவையும் தாமிரம் கட்டுப்படுத்துகிறது. 


முகச் சுருக்கத்தை தடுக்கும்:
பண்டைய கால மக்கள் அழகு சம்பந்தமான பொருட்களை தயாரிக்க தாமிரத்தையே பயன்படுத்தினர். ஏனென்றால் உடலில் சுருக்கங்களை ஏற்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் சக்தி தாமிரத்திற்கு உண்டு. இதன்மூலம் சிறு வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

ஆனால் தாமிரத்தில் சேமித்து வைக்கப்படும் நீரை அதிகம் உட்கொள்வதும் நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அதிகப்படியான தாமிரத்தால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மேலும் உங்கள் உறுப்புகளையும் சேதப்படுத்தும். இதனை நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் குடிக்கவும். ஆறு மணி நேரத்திற்கு மேலாக இதில் குடிநீரை சேமித்து வைக்கக் கூடாது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags