அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக ஏஐசிடிஇ- இல் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றின் புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் கே பி அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இது கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களை கொச்சைப்படுத்தும் செயல் என்று தெரிவித்த ஜெயக்குமார், இப்படிக் கூறுவதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை பலவீனப்படுத்தும் மு.க.ஸ்டாலின் எண்ணம் ஈடேறாது என்றார். இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி ஷர்டுகள் மூலம் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவது ஜனநாயகப் பண்பு என்றும் ஜெயக்குமார் கூறினார்.
இறுதி பருவ தேர்வு நீதிமன்ற தீர்ப்பின்படி நடத்தப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்ததற்கு எதிராக ஏ ஐ சி டி இலிருந்து எந்தவிதமான கடிதமும் வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.