தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் எதிர்காலம் கருதி இணையத்தளம் மூலமாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு சார்பாக தொலைக்காட்சி வாயிலாகவும் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக புகார் எழுந்தது. இது சம்மந்தமான வழக்கு சென்னை உயநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு இன்று (செப். 7) விசாரணைக்கு வந்த போது, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் காணொலி வாயிலாக ஆஜராக விளக்கம் அளித்தார்.
அப்போது, "கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த 75 பள்ளிகளில், இதுவரை 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மற்ற பள்ளிகள் மீதான புகார்கள் விசாரணையில் உள்ளது" என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பள்ளிக் கல்விக் கட்டண விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்ததோடு, நீதிமன்ற உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கையோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தனியார் பள்ளிகளில் 40% முதல் தவணைக் கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 30 வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.