தனியார் பள்ளி மாணவர்களை, அரசு பள்ளிகளில், எந்த நிபந்தனையுமின்றி சேர்ப்பதற்கு, தனியார் பள்ளிகளின் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த மாவட்ட சுயநிதி பள்ளிகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிக்கு மாறும் மாணவர்களை, மாற்று சான்றிதழ் இல்லாமல், அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, தனியார் பள்ளிகளை கடுமையாக பாதித்துள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து, 2,000 கோடி ரூபாய் வரை, கட்டண பாக்கியை வசூல் செய்ய வேண்டியுள்ளது.
கட்டணத்தை வசூலிக்க வேண்டிய நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதற்கு, மாற்று சான்றிதழ் தேவையில்லை என்ற உத்தரவு, கட்டண பாக்கி உள்ளவர்களுக்கு சாதகமாக உள்ளது.இந்த உத்தரவால், தனியார் பள்ளிகளின் நிதி நிலை மோசமாகும்.
கட்டண பாக்கி செலுத்தாமல், தனியார் பள்ளிகளை ஏமாற்றி விட்டு, அரசு பள்ளிகளில் சேரும் நிலை உள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக, தனியார் பள்ளி களின் வருவாய் கடுமையாக பாதித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தும் நிலையிலும், பலர் கட்டண பாக்கி வைத்துள்ளனர். அதனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை.
எனவே, பள்ளி கல்வித் துறை பிறப்பித்துள்ள உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் தற்போது, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள், மூன்று மாதங்களுக்குள், தனியார் பள்ளிகளில், தங்கள் மாற்று சான்றிதழை பெற்று, சமர்ப்பிக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.