தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. அதன் பின்னர், பணிக்குச் செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதே போல பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழுவும் பரிந்துரைத்தது. இதனையடுத்து பேருந்துகளை இயக்க அரசு ஒப்புதல் அளித்ததன் பேரில் கடந்த 1 ஆம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் வரும் 7 ஆம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதனிடையே ஊரடங்கு போடுவதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் பஸ் பாஸ் பெற்றவர்கள் அதனை வரும் 15 ஆம் தேதி வரை உபயோகித்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.
இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டையை அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை அணுகி பாஸ் பெறலாம் என்றும் மேலும் விவரங்களுக்கு promtc123@gmail.com என்ற இணைய தள முகவரியிலும், 044-2345 5801 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.