1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பள்ளிகள் மீது புகாரளிக்க மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டது கல்வித்துறை!

 உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, பெற்றோர் புகார் அளிக்க, தனியாக, 'இ - மெயில்' முகவரி வழங்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அனுமதிமேலும், பள்ளிகளின் சார்பில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்த, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கவும், அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பள்ளிகள், உயர் நீதிமன்றம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அனுமதியை மீறி, அதிக கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்துவதாக, புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, வரம்பு மீறும் பள்ளிகள் குறித்து புகார் தருவதற்கு, தனியாக, 'இ - மெயில்' முகவரிகளை, பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை உயர் நீதிமன்றத்தின், ஜூலை, 17ல் பிறப்பித்த உத்தரவை மீறி, தனியார் பள்ளிகள், 40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்தக் கூடாது. இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரின் கடிதத்தில், ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் தொடர்பாக, பள்ளிகளுக்கு சுற்றறிக்கையும், ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 40 சதவீதத்துக்கு மேல், கட்டணம் செலுத்துமாறு, பெற்றோரை வற்புறுத்தும் பள்ளிகள் மீது, பெற்றோர் புகார் தெரிவிக்கலாம்.ஆதாரம்இதற்காக, ceokanchee puram@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் புகார்களை, இ - மெயிலிலோ அல்லது காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலக முகவரிக்கோ, உரிய ஆதாரங்களுடன் அனுப்பலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


100 சதவிகித கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகாரளிக்க ஏதுவாக, மின்னஞ்சல் முகவரியை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி, பெரும்பாலான தனியார் பள்ளிகள் 100 சதவிகித கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், பெற்றோர்கள், தங்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது புகார் தெரிவிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தி அதை விளம்பரப்படுத்தவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை ஓர் உத்தரவை பிறப்பித்திருந்தது. 

கல்வித்துறையின் உத்தரவைப் பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்துக்கு என்று பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தி அதை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.


madurai district :-    feegrievancecellmdu@gmail.com



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags