தலைமுடி அடர்த்தியாக இருக்க உதவும் கேரட் எண்ணெய்: வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
தலைமுடி அடர்த்தியாக இருப்பதற்கு கேரட் எண்ணெய் உதவுகிறது.
நாம் தினமும் சத்தான உணவுகள் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பது போல, தலைமுடிக்கும் சத்துக்கள் தேவை. தலைமுடி வலுவாக இருக்க வேண்டுமென்றால், அதற்கான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து பராமரிக்க வேண்டியதும் அவசியம். மன அழுத்தம் மற்றும் தண்ணீர் காரணமாக முடி உதிர்வு பிரச்சனைகளும் ஏற்படும். இதில் இருந்து விடுபட கேரட் போதும். இதில் வைட்டமின் ஏ அதிக அளவில் காணப்படுகிறது. முடி வேர்க்கால்கள் வலுவாக இருப்பதற்கு கேரட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் எண்ணெய் உதவும்.
தயாரிக்கும் முறை:
முதலில் கேரட்டை துருவி ஒரு கண்ணாடி ஜாருக்குள் போட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து ஜாடிக்குள் ஆலிவ் எண்ணெய் ஊற்றவும். இது விளிம்பை அடைந்தவுடன் இறுக்கமாக மூடிவிடவும்.
இதனை குளிர்ந்த மற்றும் வெளிச்சம் இல்லாத ஒரு இடத்தில் வைக்கவும். குறைந்தது ஒரு வாரமாவது அப்படியே வைத்துவிடுங்கள்.
கேரட்டில் உள்ள சாறுகள் எண்ணெயில் இறங்கி ஆரஞ்சு நிறமாக மாறியவுடன் வடிகட்டி, இதனை வேறு ஒரு பாட்டிலுக்கு மாற்றிவிடுங்கள்.
இந்த எண்ணெயை தலைமுடி வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்.
வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த எண்ணெயை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள வைட்டமின் ஏ முடி உதிர்வதை தடுக்கும். இதுமட்டுமல்லாமல் தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.