நாளை (செப்.12) நடைபெறும் நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
* நாளை பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் நடைபெற உள்ளது.
* மாணவர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.
* தேர்வு மையத்துக்கு வரும் போது, ஹால் டிக்கெட் மற்றும் உடல்நலன் குறித்த மருத்துவச் சான்று கட்டாயம்.
* ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தின் படி, மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
* அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை கட்டாயம்.
* வெளிப்படைத்தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில் கட்டாயம்.
* நீட் விண்ணப்ப படிவத்தில் உள்ள Passport Size புகைப்படம் ஒன்றையும் உடன் எடுத்து வர வேண்டும்.
* 50 மி. அளவுள்ள கிருமி நாசினி கட்டாயம்.
* கிருமி நாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் அவசியம்.
* முகக்கவசம் கட்டாயம்.
* 6 அடி தனி மனித இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
* தேர்வு முடிந்த பின்னர், படிப்படியாக மாணவர்கள் வெளியேற்றப்படுவர்.
* ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
* தேர்வின் போது மேற்கண்ட நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.