J.E.E தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு J.E.E நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் 660 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். எனினும் தேர்வுக்காக பதிவு செய்தவர்களில் பலர் தேர்வு எழுதவில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், J.E.E தேர்வுகளை வெற்றிகரமாக நடத்த உதவியதாக மாநில அரசுகள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், முடிவுகளை jeemain.nta.nic.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.