1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளமின்றி தவிப்பு

 

கொரோனா ஊரடங்கு விடுமுறையால் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் களுக்கு ஏப்., முதல் ஆகஸ்ட் வரை சம்பளம் வழங்காததால் குடும்பம் நடத்த வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.


தமிழகத்தில் உள்ள 113 அரசு கல்லுாரிகளில் இரு ஷிப்ட்களில் 4084 கவுரவ விரிவுரையாளர்கள் மாதம் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், உயர்கல்வித்துறை நிர்வாகம் ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால், கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பம் நடத்த வழியின்றி தவித்து வருகின்றனர்.அரசு கல்லுாரி (யு.ஜி.சி., தகுதி) கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் வி.தங்கராஜ் கூறியதாவது, ஏப்ரல், மே மாதங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வாதாரத்தை நடத்தினோம்.

தற்போது தேர்வும் ரத்து செய்யப்பட்டதால், 5 மாதமாக சம்பளமின்றி தவிக்கிறோம். மேலும், எங்களுக்கென யு.ஜி.சி., நிர்ணயித்த சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். விரைந்து ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வை நடத்த வேண்டும், என்றார்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags