1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பிளஸ் 2 தலைமை ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'

பிளஸ் 2 தலைமை ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'


பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் குளறுபடி நடந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு, ஏதாவது ஒரு நாள் வந்திருந்தாலும், அவர்களுக்கு மதிப்பெண் தரப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிளஸ் 1 பள்ளி படிப்பில் இருந்து இடைநிறுத்தம் செய்து, மாற்று சான்றிதழ் வாங்கிய மாணவர்களும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 இதையடுத்து, அரசு தேர்வுத்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களிடம் விசாரிக்கப்பட்டது. அதில், மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியல் மற்றும் அவர்களின் வருகை பதிவு விபரங்களை, பள்ளிகளில் இருந்தே வழங்கியதாக, முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, தவறான தகவல் அளித்த பள்ளிகளில் விசாரணை நடத்த, பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, மாற்று சான்றிதழ் வாங்கிச் சென்ற மாணவர்களையும், பிளஸ் 2 தேர்ச்சி பட்டியலில் இடம் பெற செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.






அதில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலுக்கு, டி.சி., வாங்கிய மாணவர் விபரங்களையும்இணைத்து, தவறானதகவல்களை அளித்ததுதொடர்பாக, உரிய விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க நாளை கடைசிதனி தேர்வர்கள் மற்றும் மதிப்பெண் திருப்தியில்லாத மாணவர்கள், பிளஸ் 2 தேர்விற்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாளாகும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால், பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டு உள்ளனர்.




 பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாதவர்கள் மற்றும் பள்ளிகளில் படிக்காமல் பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள் ஆகியோர், தேர்வுத்துறை நடத்தும் தேர்வில் பங்கேற்கலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அறிவித்துள்ளார்.இந்த தேர்வு, வரும் 6ம் தேதி துவங்கி, ஆக., 19 வரை பாடவாரியாக நடக்க உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோருக்கு, 23ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்கியது. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்; நாளைக்குள் விண்ணப்பிக்காதவர்கள், 'தட்கல்' சிறப்பு கட்டண திட்டத்தில், வரும் 28ம் தேதி விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags