உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தினமும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதன் அவசியத்தை கொரோனா பாதிப்பு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. காய்கறிகளில் இயற்கையாகவே ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் உங்கள் அன்றாட வாழ்வில் காய்கறிகளை கட்டாயமாக சேர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் அதனை சாப்பிடாமல் அடம்பிடித்தால், சூப் தயாரித்து அவர்களுக்கு கொடுங்கள். அப்படி தயார் செய்து கொடுக்கும் போது குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள் அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான சத்துக்களும் கிடைத்துவிடும். இதுமட்டுமல்லாமல் சருமம் பொலிவுடன் இருக்கவும் இது உதவும். அந்த வகையில் கேரட்- பூசணி சூப் தயாரிக்கும் முறையை தற்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெண்ணெய்- 2 டீஸ்பூன்
பூண்டு- 5
கேரட்- 250 கிராம் (நறுக்கியது)
பூசணி- 250 கிராம் (நறுக்கியது)
தண்ணீர்- 2 கப்
மிளகுத்தூள்
உப்பு
செய்முறை:
குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடான பிறகு, பூண்டு சேர்க்கவும். பூண்டு பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கவும்.
அதன்பிறகு கேரட், பூசணி, உப்பு சேர்க்கவும். 3- 5 நிமிடங்கள் இதனை வதக்கவும்.
அதன்பிறகு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்தபிறகு, அடுப்பை அணைத்துவிட்டு இதனை குளிரவிடவும்.
இதனையடுத்து நாம் வேகவைத்த இந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இதில் கிரீம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.