1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

காரில் உணவை எடுத்துச் செல்கிறீர்களா? விஷமாக மாறும் அபாயம்.

காரில் உணவை எடுத்துச் செல்கிறீர்களா? விஷமாக மாறும் அபாயம்.



காரில் உணவு பொருட்களை ஏன் ஒரு போதும் விட்டு செல்ல கூடாது என்பதை குறித்து இந்த பதவில் தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய அதிநவீன உலகில் நாம் வீட்டை விட்டு தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் போது, ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை கொண்டு செல்வது என்பது நாம் அநேகரின் வழக்கமாக உள்ளது அது ஒரு வகையில் நல்லது தான் ஆனால் ஆனால் அந்த உணவை காரில் விட்டு செல்வது என்பது நல்லது இல்லை. ஆம், காரில் உணவை விட்டு செல்வதால், அது எவ்வளவு அபாயகரமானதாக மாறுகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. நாம் எடுத்து செல்லும் உணவு பொருட்கள் கெட்டு போகாமல் பாதுகாப்பாக இருக்க பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சூழலை நாம் தவிர்பது அவசியம்.


அதே சமயம் பாக்டீரியாக்கள், 4 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலைகளில் மிகவும் வேகமாக வளரும். மேலும், காருடைய இன்டீரியரின் வெப்ப நிலை கோடை காலங்களிள் மிக எளிதாக 60 டிகிரி செல்சியஸை அடையும்.

பொதுவாக, காருக்கு உள்ளே இருக்கும் வெப்ப நிலை வெளியே இருக்கும் வெப்ப நிலையை காட்டிலும் அதிகமாக இருக்கும் அதனால் பாக்டீரியாக்கள் எளிதாக பரவி வியும். மேலும், கண்ணுக்கு தெரியாத சிறிய பாக்டீரியாக்கள் 17 மில்லியன் சந்ததிகளை வெறும் 12 மணி நேரத்தில் உருவாக்கிவிடும். அதாவது பாதி நாளில் 1.70 கோடி பாக்டீரியாக்கள் உருவெடுக்கும்.

ஒருவேளை வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேலாக இருந்தால் வெறும் 1 மணி நேரத்திற்கு மட்டும் தான் உணவு பாதுகாப்பாக இருக்கும் அதற்கு பின் பாக்டீரியாக்கள் பரவுவதால் ஃபுட் பாய்சனாக (Food Poisoning) ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் காரின் கேபினில் உண்ணக்கூடிய பொருட்களை ஒருபோதும் விட்டு செல்லாதீர்கள்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags