1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இடைக்கால பட்ஜெட்: முக்கியம்சங்கள்

இடைக்கால பட்ஜெட்: முக்கியம்சங்கள்

காவல்துறைக்கு ரூ.9,567.93 கோடிய் ஒதுக்கீடு.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 436.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நீதித் துறைக்கு 1,437.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

நீதித்துறை நிர்வாகத்துறையில் புதிய நீதிமன்ற கட்டடங்களை கட்டுவதற்காக ரூ.289.78 கோடி ஒதுக்கீடு.


வேளாண் துறைக்கு 11982.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மீன்வளத்துறை 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத்துறைக்கான மூலதன செலவினங்கள் ரூ.580.97 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது!.

நெடுஞ்சாலை துறைக்காக ரூ.6,023.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 19,420.54 கோடி ஒதுக்கீடு.

புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு, மினி கிளினிக்குகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு.


உயர்கல்வித்துறைக்காக மொத்தம் ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு.

சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு.

கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1,224.26 கோடி ஒதுக்கீடு.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 3,700 கோடி ஒதுக்கீடு.

நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.2,350 கோடியும், அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடியும் ஒதுக்கீடு.2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சித்துறைக்காக ரூ. 22,618.58 கோடி ஒதுக்கீடு.

நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ. 6,453 கோடி ஒதுக்கீடு

மதிய சத்துணவு திட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 43,246 பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ. 1953.98 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு.

கொரோனா தொற்று காரணமாக, சுகாதாரம் மற்றும் நிவாரணம் தொடர்பான பணிகளுக்கு ரூ.12,917.85 கோடி வருவாய் கணக்கில் கூடுதல் செலவினம்.

கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிக்காக முதற்கட்டமாக ரூ. 5000 கோடி நிதி ஒதுக்கீடு.

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

மாற்று திறனாளிகள் துறைக்கு ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும். அவற்றில், 2 ஆயிரம் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டமாக, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், ரூ.1580 கோடி ரூபாய் செலவில் 2200 BS – VI பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்

தமிழ்நாட்டில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களில் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags