1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பள்ளிக்கல்வித்துறை TNVN App நிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்பறை செயல்பாடுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் நோக்கில், 'வகுப்பறை நோக்கின்' என்ற மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

அதில், இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முன்னோடியாக விளங்குவதற்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்த
அமைச்சர், படிப்படியாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு 34,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

”பள்ளிக்கல்வித்துறையில் பலர் இந்த மாதம் ஓய்வு பெறப் போகிறீர்கள் என நினைக்கும்போது...” என்று பேச ஆரம்பித்தவர் சட்டென உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அமைச்சருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் பள்ளிக்கல்விதுறை செயல்பாடுகள் குறித்து விளக்கமாகப் பேசினார்.

*அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் ஓய்வு; தேம்பி அழுத அமைச்சர் செங்கோட்டையன்...!*

அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஒய்வு பெறுவதை நினைத்து அமைச்சர் செங்கோட்டையன் தேம்பி அழுத சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததை ஆய்வு செய்வதற்காக வகுப்பறை நோக்கின் என்ற அப்ளிக்கேஷன் தயார் செய்யப்பட்டுள்ளது.

 பள்ளியின் ஆய்வுக்கு செல்லும் கல்வி அலுவலர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மட்டுமே ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.


இதற்கு முன்னர் ஆய்வு அலுவலர்கள், ஆய்வுகளை முடித்தப்பின் அறிக்கையை மட்டுமே அளிப்பார்கள். இதனால் மாணவர்களின் உண்மை நிலையை உடனே அலுவலர்கள் தெரிந்துக் கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையை மாற்றும் வகையில் சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் நடத்தப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வகுப்பறை நோக்கின் என்ற அப்ளிக்கேஷன் செயல்பாட்டினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், ''மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அமைச்சர் எடுத்துள்ளார்.

 வகுப்பறை நோக்கின் என்ற அப்ளிகேஷன் முக்கிய பங்கினை அளிக்கும். மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். ஏற்கனவே திருவண்ணாமலை, சென்னை மாவட்டத்தில் சோதனை செய்யப்பட்டது. தற்பொழுது மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இதன் மூலம் பெற முடியும்.

 கற்றல் அளவு, மாணவர்கள் திறன் உட்பட பல செயல்பாடுகளை அளவிட முடிவதுடன், பொது தகவல்களையும் மாணவர்களுக்கு தர முடியும்'' என்றார்.

 அதனைத் தாெடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் பல்வேறு அலுவலர்கள் ஓய்வு பெறுவதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

உங்களை விட்டு பிரிவது வேதனையாக இருக்கிறது'' எனப் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென கண்ணீர் விட்டு அழுதார். தேம்பி அழுத அமைச்சர் செங்கோட்டையன்தொடர்ந்து பேசிய அமைச்சர், ''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாநில இயக்குநர் போல் பணியாற்ற வேண்டும்'' என்றார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உருக்கமாக பேசியது அரசு அலுவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து பேசிய அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன், ''அமைச்சர் தன்மீதும் , துறையின் மீதும் அன்பினை வளர்த்து பாசத்தை கொட்டியுள்ளார்.

தான் ஒய்வு பெற்றாலும் இந்தத்துறை தங்களின் திறமையால் என்றும் சிறப்பாக விளங்கும். தனது 30 ஆண்டுகால பணி அனுபவத்தை தாங்கள் எப்போது கேட்டாலும் வழங்க தயாராக இருப்பேன்'' எனத் தெரிவித்தார்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags