1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

நீரழிவு நோயில் எத்தனை வகைகள் உள்ளது?

நீரழிவு நோயில் எத்தனை வகைகள் உள்ளது?




1. டைப் 1 நீரழிவு நோய்: இது உடலில் இன்சுலின் சுரக்காமல் போனால், அல்லது மிகக் குறைந்த அளவு மட்டுமே இன்சுலின் சுரந்தால் ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படக் கூடும்.


இது இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தின் அணுக்களை சேதமடையச் செய்யும். இந்த நோய் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை  பாதிக்கின்றது. இரத்தத்தில் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள, தினமும் இன்சுலின் ஊசி பொட்டுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.


2. டைப் 2 நீரழிவு நோய்: இந்த வகையில் உடலில் இன்சுலின் பயன்படுத்தப்படாது அல்லது, இன்சுலின் உற்பத்தியாகாது. சர்க்கரை அணுக்களுக்குள் செல்ல முடியவில்லை என்றால், அணுக்களில் அதிக அளவு க்ளுகோஸ் உள்ளது அதனால் அணுக்கள் சக்தியை பயன்படுத்த முடியாது என்கின்ற நிலை ஏற்படுகின்றது.


இது 35 வயதிற்கு மேலானவர்களுக்கு அதிக அளவு ஏற்படுகின்றது. 9௦% நீரழிவு நோய் இருப்பவர்கள், இந்த வகையாலே பாதிக்கப்படுகின்றனர். சரியான உணவு முறை மற்றும் சீரான உடல் எடையை தக்க வைத்துக் கொண்டால், இதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.


3. கற்பகால நீரழிவு நோய்: இது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும். இது குழந்தை மற்றும் தாய், இருவரையும் பாதிக்கும். எனினும், பெரும்பாலான பெண்களுக்கு இந்த நீரழிவு நோய், குழந்தை பிறந்தவுடன் குணமாகிவிடும்.


4. பிரிடியாபெடீஸ்: இது காலை வெறும் வயிற்றிலோ அல்லது உணவு அருந்திய பின்னரோ உடலில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறிக்கும். இந்த நேரங்களில் வழக்கத்தை விட உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இந்த நோயின் தாக்கம் இருந்தால், வெகு விரைவாகவே பல பாதிப்புகளை  சந்திக்க நேரிடும்.


நீரழிவு நோயின் அறிகுறிகள்: ஒரு சில அறிகுறிகளை வைத்து இந்த நோயை கண்டு பிடித்து விடலாம். பலருக்கும் உடலில் நீரழிவு நோய் இருக்கின்ற அறிகுறி தெரியாமல், ஆரம்ப காலத்தில் அலட்சியமாக விட்டு விடுகின்றனர். ஆனால், இது உண்மையான பாதிப்பை ஏற்படுத்தும் போது தான் விழிப்புணர்வு ஏற்படுகின்றது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags