1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

8மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, மின்னியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்தான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை

பணியிடம்: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்

மொத்த காலியிடங்கள்: 36

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: இலை விபூதி போத்தி - 01
பணி: திருவலகு - 01
பணி: பலவேலை - 04
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 
பணி: தவில் - 01
பணி: தாளம் - 01
பணி: சுருதி - 01
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சிக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

பணி: காயாமொழி கோவில் அர்ச்சகர் - 01
பணி: காயல்பட்டிணம் கோவில் அர்ச்சகர் - 01
பணி: குலசை கோவில் அத்தியான வாத்தியார் - 01
தகுதி: தமிழில் எழுத, பேச தெரிந்திருப்பதுடன் ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சிக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

பணி: குலசை கோவில் தேவாரம் - 01
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் தேவார பாடசாலையில் பயின்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்ரு பெற்றிருக்க வேண்டும். 

பணி: குலசை கோவில் மடப்பள்ளி - 01
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில் நடைமுறை பழக்கவழக்கத்தின்படி நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர் - 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை அல்லது தமிழில் உயர்நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை அல்லது ஆங்கிலத்தில் உயர்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை போன்ற ஏதாவதொரு நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் - 09
தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை மின் பொறியாளர் - 01
தகுதி: பொறியியல் துறையில் மின்னியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி மின் கம்பியாளர் - 05
தகுதி: மின் கம்பியர் பணிக்கான சான்று மற்றும் மின்னியல் உரிமம் வழங்கும் வாரியத்தில் இருந்து எச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

பணி: பிளம்பர் - 03
தகுதி: அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கான சான்று மற்றும் பணியில் 5 ஆண்டு முன் அனுபவம், பலியுனர் தகுதி இரண்டு ஆண்டுக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.02.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தனித்தனியான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhrce.gov.in, www.tiruchendurmurugantemple.tnhrce.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோவில், திருச்செந்தூர் - 628215, தூத்துக்குடி மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 24.02.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.tiruchendurmurugantemple.tnhrce.in/pdf/Job_application2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags