1. நீரிழிவு நோய்
நாவல்பழம், பாகற்காய், அவரைபிஞ்சு ஆகியவை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோய்க்கு நன்று.
2. மதுமேகம்
நாவல்கொட்டை சூரணம் 2 கிராம் நீரில் கலந்து காலை, மாலை குடித்து வர மதுமேகம், அதிமூத்திரம் கட்டுப்படும்.
3. பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு குறைய
பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு குறைய நாவல் மரப்பட்டைத் தூளை மோரில் குடிக்க, பெண்களுக்கு இரத்தப் போக்கு குறையும்.
4. ஆண்மை குறைவு
நாவல் பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு சதையை பிசைந்து பாலில் கலந்து சிறிது தேன் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் ஆண்மை குறைவு குறையும்.
5. இரத்தம் ஊற
இரத்தம் ஊற நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும்.
6. சர்க்கரை நோய் குறைய
வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவல் கொட்டை பொடி சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்.
7. சிறுநீர் கோளாறு நீங்க
நாவல் பழக்கொட்டையை பொடியாக்கி நீருடன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு குறையும்.
8. வாய்ப்புண் குறைய
நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
9. சீத பேதி குறைய
நாவல் கொழுந்தைச் சாறு எடுத்து ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு மிளகளவு லவங்கப் பட்டைத்தூளுடன் 2 ஏல அரிசி சேர்த்து குடித்து வந்தால் சீத பேதி குறையும்.
10. மூலம் குறைய
பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட மூலம் குறையும்.
11. மதுமேகம்,அதிமூத்திரம் கட்டுப்பட
காலை,மாலை இருவேளையும் நாவல்கொட்டை சூரணத்தை 2 கிராம் அளவு எடுத்து நீரில் கலந்து குடித்து வர மதுமேகம்,அதிமூத்திரம் கட்டுப்படும்.
12. வயிற்றுப்போக்கு குறைய
நாவல் இலை, மாங்கொழுந்து இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு குறையும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.