1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கரோனாவால் குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்த 92% மாணவர்கள்: ஆய்வில் தகவல்

கரோனாவால் குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்த 92% மாணவர்கள்: ஆய்வில் தகவல்


கரோனா பெருந்தொற்றால் மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கத்தால் 92% மாணவர்கள், குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்துள்ளதாகத் தனியார் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சார்பில் சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 44 மாவட்டங்களில் உள்ள 1,137 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 16,067 மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

’’அனைத்து வகுப்புகளிலும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, சராசரியாக 92 சதவீத மாணவர்கள், குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்துள்ளனர். இங்கு மொழித் திறன் என்பது, ஒரு குறிப்பிட்ட படம் குறித்தோ அதன் பண்புகள் குறித்தோ விளக்குவது, அதுதொடர்பான வார்த்தைகளை வாசிப்பது, புரிதலுடன் வாசித்தல், ஒரு படத்தை அடிப்படையாகக் கொண்டு எளிய வாக்கியங்களை அமைப்பது உள்ளிட்டவற்றைக் குறிக்கிறது.

அதேபோல சராசரியாக 82 சதவீத மாணவர்கள், குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட கணிதத் திறனை இழந்துள்ளனர். அதாவது ஒற்றை மற்றும் இரண்டு இலக்க எண்களை அடையாளம் காணுதல், எண் கணிதச் செயல்பாடுகளைச் செய்தல், சிக்கல்களைத் தீர்க்க அடிப்படை எண் கணிதச் செயல்பாடுகளைப் பயன்படுத்துதல், இரண்டு அல்லது முப்பரிமாண வடிவங்களை விவரித்தல், தரவிலிருந்து அனுமானங்களைப் படித்தல் மற்றும் வரைதல் ஆகிய திறன்களை மாணவர்கள் இழந்துவிட்டனர்.

இந்த கற்றல் இழப்பு அனைத்து மட்டங்களிலும் நிகழ்ந்திருக்கிறது. இதைப் போக்கும் வகையில் பாடங்களுக்கு இடையேயான இடைவெளியைப் போக்கும் வகையில் சிறப்பு வகுப்புகள், கூடுதல் நேரம், சமூகம் சார்ந்த கற்றல் செயல்பாடுகள் மற்றும் பொருத்தமான பாடத்திட்டப் பொருட்கள் ஆகியவை மூலம் மீட்டெடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags