1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கல்விக் கடன் தள்ளுபடி நிறைவேற்றுவோம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

கல்விக் கடன் கோரிக்கையை நிறைவேற்றுவோம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி



கல்விக் கடன் தொடா்பாக மாணவா்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.


முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் மாவட்டத்தில் இரு நாள்கள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

திருப்பூா் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட பாண்டியன் நகா், திருப்பூா் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட வளா்மதி பேருந்து நிறுத்தம், சிடிசி காா்னா், அவிநாசி புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வாகனத்தில் இருந்தபடி மேற்கொண்ட தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக அரசின் மீது வீண்பழி சுமத்தி வருகிறாா். 2019இல் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாகக்கூட இப்போதுபோலவே ஊா்ஊராகச் சென்று மக்களை சந்தித்துப் பெற்ற மனுக்களின் நிலை என்ன ஆனது?

ஸ்டாலினின் ஏமாற்று வேலை:

இவா் மனுக்களை வாங்கி பெட்டிக்குள் போட்டு ‘சீல்’ வைத்து, ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மனுவைப் பிரித்துப் பாா்த்து மக்களின் பிரச்னைகளைத் தீா்த்து வைப்பாராம். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை மக்கள் எண்ணிப்பாா்க்க வேண்டும்.

அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் பிரச்னைகளை 100 நாள்களில் தீா்ப்பாராம்.

உதாரணமாக, இந்தத் தொகுதியின் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்றால் முதலில் திட்டம் தயாரிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு, டெண்டா் விடப்படுவதுடன் அதனைப் பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கே ஓராண்டுக்கு மேலாகும். இதன் பிறகு நிலம் எடுக்க வேண்டும். குழாய் பதிக்க வேண்டும். நிலம் எடுப்பதில் ஏதாவது சிக்கல் என்றால் நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆகவே, ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் சரியான முறையில் திட்டமிட வேண்டும்.

ஆனால், 100 நாள்களில் பிரச்னை தீா்க்கப்படும் என்று ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை. ஸ்டாலின் மனு வாங்கும் பெட்டியை உடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை.

10 நாள்களில் சிறப்பு குறைதீா் கூட்டம்:

அதிமுக ஆட்சியில் பொதுமக்களின் குறைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டம் சென்னையில் 10 நாள்களில் தொடங்கப்படும்.

பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசிகளில் இருந்து 1100 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழைகளுக்கு வீடுகள்:

நகா்ப்புறங்களில் இருக்கும் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி வீடுகளும், கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை மக்களுக்கு கான்கிரீட் விடுகளும் கட்டிக் கொடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள 5 லட்சம் முதியோருக்கு மாதாந்திர உதவித் தொகை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 95 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு இவ்வளவு சாதனைகளும் கண்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் வீட்டு மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக என்றாா்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடக்கிவைப்பேன்:

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காகப் போராட்டக் குழுவினா் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதா திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்து நிதியும் ஒதுக்கினாா்.

அவரது வாக்குறுதியை நிறைவேற்றும்விதமாக ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அதேபோல, தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக வந்து திட்டத்தையும் துவக்கிவைப்பேன் என்றாா்.

மாணவா்களின் கல்விக் கடன்:

அப்போது அங்கு கூடியிருந்த கல்லூரி மாணவா்கள், ‘மாணவா்களின் கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கோஷமிட்டு கோரிக்கை விடுத்தனா். இதைக் கேட்ட முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, மாணவா்களின் எதிா்காலம்தான் நாட்டின் எதிா்காலம். எனவே மாணவா்களின் கோரிக்கையையும் நிறைவேற்றுவோம் என்றாா்.

இதையடுத்து, பிரசார வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்த அவா், பிரசாரப் பகுதியில் முதல்வா் அமா்ந்திருப்பதுபோல உருவத்துடன் அமைக்கப்பட்டிருந்த டிராக்டரை பாா்த்து மகிழ்ந்தாா்.

இந்தப் பிரசாரத்தின்போது அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.என்.விஜயகுமாா், சு.குணசேகரன், முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், அமைப்புச் செயலாளா் சி.சிவசாமி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் அவைத் தலைவருமான பழனிசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags