1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இளமையாக இதயத்தை வைக்கும் நடைபயிற்சி!

இளமையாக இதயத்தை வைக்கும் நடைபயிற்சி!


இன்றைய வாழ்க்கை முறையில், இதய நோய் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது.


இதய நோய் ஏற்பட்டு இருந்தால், இதயத்திற்கு ஓய்வு அவசியம். நல்ல இதமான படுக்கையில், மின்விசிறிக்கு நேராக கீழே இல்லாமல், நல்ல புழுக்கம் இல்லாமல், குறைந்த வெளிச்சம் உள்ள அறையில், மன அமைதியுடன் இருப்பது முக்கியம். எந்த விஷயத்திலும் பிடிவாதம் இல்லாத மவுனம், மனதை லேசாக வைக்க உதவும்.ஆரோக்கியமாக இருப்பவர்கள், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதே நல்லது.

சோம்பலும், அதிக ஓய்வும் பொது ஆரோக்கியத்தை குறைத்து விடலாம். உடல், மூளை உழைப்போ இதய நோய்க்கு காரணமாவதில்லை. மனநிலை கோளாறு, அதிர்ச்சி இவை தான் பெரும்பாலும் இதய நோய்க்கு காரணமாகிறது.

இதய நோய் உள்ளவர்கள் நடமாடிக் கொண்டே இருந்தால், அதிகம் சிரமப்படுவதில்லை. வெகு நேரம் ஒரே நிலையில் நின்று கொண்டிருந்தால், சிரமம் அதிகமாகும். கை, கால்களை அசைப்பதால், இதயத்தின் தசைகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு நடைபயிற்சி உதவும். புதிது புதிதாக அதிர்ச்சியும், மனக் கோளாறும் வராத பட்சத்தில், தானாகவே இதய நோய் குணமடைந்து விடுகிறது. நுரையீரல் உபாதையும், உடலில் ரத்தக் குறைவுமே பெரும்பாலான இதய நோய்க்கு காரணம். இதயக் கோளாறுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும், நோய் கட்டுக்குள் இருக்குமே தவிர, குணமடைவதில்லை. மன நிலையும் உடல் நிலையும் பொதுவாக சீரடைந்த பின்னரே இதயம் குணமடைகிறது.

வெறும் வயிற்றில் காலையிலோ, மாலையிலோ முடிந்தவரை காலாற நடப்பது இதயத்திற்கு நல்லது. உடல் உழைப்பாளியின் இதயம், சோம்பி இருப்பவனின் இதயத்தை விட, 15 ஆண்டுகளாவது இளமையாக இருக்கும். ரத்தத்தில் கொழுப்பு படிவதை, உடல் உழைப்பு குறைக்கும்; இதய நோயே வராமல் பாதுகாக்கும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags