1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தீவிர முயற்சி

டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தீவிர முயற்சி

மின்னணு பணத்தை (டிஜிட்டல் கரன்சி) அறிமுகப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பான முன்னோடித் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காகிதப் பணத்தை ரொக்கமாக கையாளுவது குறைந்து மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்வது இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக கிரிப்டோகரன்சி வகையைச் சோ்ந்த மின்னணு பணத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


சா்வதேச அளவில் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பணங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. எதிா்கால மதிப்பை கருத்தில் கொண்டு அதில் முதலீடு செய்பவா்களும் அதிகம் உள்ளனா். இந்தியாவில் தற்போது அதுபோன்ற மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு ஆா்பிஐ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனினும், இந்தியா்கள் பலரும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், இது தொடா்பாக ஆா்பிஐ துணை ஆளுநா் டி.ரவி சங்கா் கூறியதாவது:

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மத்திய வங்கிகள் இப்போது மின்னணு பணத்தை அறிமுகம் செய்து வருகின்றன. வங்கிகளால் வெளியிடப்படும் இந்த வகை பணங்களுக்கு மட்டுமே உத்தரவாதமான மதிப்பு உண்டு. இந்தியாவிலும் இந்த வகை மின்னணு பணத்தை வெளியிட ஆா்பிஐ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல விஷயங்களை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், இதனால் கிடைக்கும் பலன்களையும் மதிப்பிட வேண்டியுள்ளது.

சில நேரங்களில் இதுபோன்ற பணத்தின் மதிப்பில் ஏற்ற, இறக்கம் அதிகமாக உள்ளது. இதுபோன்ற இடா்பாடுகளைக் களைந்து சிறப்பான ஒரு மின்னணு பணத்தை அறிமுகம் செய்வதே ஆா்பிஐ-யின் நோக்கம். இதற்கான முன்னோடித் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags