1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...?

கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது
அவர்கள் முன்னிலையில்சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் முன்னிலையில்பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள்தீய சொற்களை பேசுவதை தவிருங்கள்அதிலும்  குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள்நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.
சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன்தலையை திருகிடுவேன்கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை  தயவுசெய்து உபயோகிக்காதீர்கள்.

சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர்எனவேகுழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர்அப்படி நீங்கள் சொன்னால்உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டுஉங்கள் கணவர்  முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.



குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லைஉங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாதுஅப்படி கூறினால்குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும்  மதிப்பு குறைந்துஅவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாதுஅதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாதுகடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால்உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன் என்பது போல பேசுவதை தவிருங்கள்இல்லாவிட்டால்,  நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்அப்படி பேசினால்குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை  வளரும்.

.படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்” இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறிஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காதுஇந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசிபிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர்வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பதுமது அருந்துவதுபுகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags