1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தடை செய்யப்பட்ட சீன Appக்கள்! - Install செய்த ஆப்களின் நிலை என்ன விரிவான விளக்கம்


இந்தியாவில் சுமார் 12 கோடி பேர் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும், சராசரியாக, சுமார் 40 நிமிடங்கள், அவர்கள் டிக் டாக் செயலியில் செலவிடுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். சில செயலிகள் மட்டும் தான் படிக்காத பாமர மக்களின் செல்போன்களிலும் இடம்பெற்றிருக்கும். 



அப்படியான ஒரு செல்போன் ஆப் டிக்டாக். இந்த நிலையில் தான், மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. 

 டிக்டாக் இந்தியா நிறுவனம் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. 


அதில், மத்திய அரசின் உத்தரவுக்கு எங்கள் நிறுவனம் கீழ்படியும். அதே நேரம், இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அரசுடன் சந்திப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டேட்டா ரகசியம், பாதுகாப்பு விஷயங்கள் உள்ளிட்டவற்றில் டிக்டாக் தொடர்ந்து ரகசியத்தை காக்கும். 



எங்களது பயனாளரின் எந்த ஒரு விவரத்தையும் இந்தியா அல்லது சீன அரசு உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு பகிர்ந்துகொண்டது கிடையாது.


 14 இந்திய மொழிகளில் கிடைக்கும் வகையில் டிக்டாக் செயல்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளோம். கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன் வழியாக மக்களை இணைத்து வருகிறார்கள். 



 இதில் பலரும் முதல் முறையாக இணையத்தை பயன்படுத்துபவர்கள். இவ்வாறு டிக் டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி தெரிவித்துள்ளார். 


கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் நீக்கப்பட்டாலும்கூட ஏற்கனவே அதை டவுன்லோட் செய்து வைத்துள்ளோர்கள், தொடர்ந்து அதைப் பார்க்க முடியும். வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். 


ஆனால் ஒரு முறை அதை நீக்கிவிட்டால், மறுபடி டவுன்லோட் செய்ய வாய்ப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags