ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டதாக வருமானத்துறை தெரிவித்துள்ளது.
![latest tamil news](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2571427.jpg)
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையாக இந்த வேலையை செய்ய நேரம் கொடுக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு முன்பே பலமுறை நீட்டிக்கப்பட்டது. நோய் பாதிப்புகள் ஒரு புறம் அதிகரிப்பதாலும், மற்ற சில காரணங்களாலும் ஆதார் - பான் இணைப்பு சாத்தியப்படவில்லை. இதற்கு முன்னதாக ஜூன் இறுதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வருமான வரித்துறை அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்கள் பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்., மாதத்தில், மத்திய அரசின் ஆதார் திட்டத்தை அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_192621955_2571427.jpg)
ஏற்கனவே, 2019-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.