1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ரேஷன் கடைகளில் வேலை வேண்டுமா? 10, +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்


ரேஷன் கடைகளில் வேலை வேண்டுமா? 10, +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்...


 
சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச்சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 272 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


நிர்வாகம்: நியாய விலைக் கடை பணி : விற்பனையாளர் 


காலியிடங்கள்: 80

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.4,300 - 12,000


பணி: கட்டுநர்காலியிடங்கள்: 192

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.3,900 - 11,000

வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்குள்பட்டவாரகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை : கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை-600018 என்ற முகவரியில் 31.07.2020 வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். 


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் பணிக்கு ரூ.150, கட்டுநர்கள் பணிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 


தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம், கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை - 600018 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2020 அன்று மாலை 5.45க்குள் சென்று சேர வேண்டும். 


 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.chndrb.in/doc_pdf/Notification_salesmanpacker.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags