1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பித்தம், மயக்கத்திலிருந்து விடுபட உதவும் அருமருந்து

பித்தம், மயக்கத்திலிருந்து விடுபட உதவும் அருமருந்து


அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்த உதவவும், பித்தத்தினால் உண்டாகக்கூடிய கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவும் சூரணம் பயன்படும். 




தேவையான பொருள்கள்

வல்லாரைக் கீரை ( உலர்ந்தது) - 100 கிராம்

முசுமுசுக்கைக் கீரை ( உலர்ந்தது) - 100 கிராம்

நெல்லி வற்றல்.         -    100 கிராம்

செய்முறை

முதலில் தேவையான அளவு வல்லாரைக் கீரை மற்றும் முசுமுசுக்கைக் கீரை ஆகியவற்றை  எடுத்து எடுத்து சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் நன்கு உலர வைத்து மேற்கூறிய அளவு  எடுத்துக் கொள்ளவும். நெல்லி வற்றல்  எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் அதிகப்படியான பித்த தன்மை உள்ளவர்களுக்கும் , பித்தத்தினால் உண்டாகக் கூடிய கிறுகிறுப்பு மற்றும் மயக்க உணர்வு குறைபாட்டினால் துன்பப்படுபவர்களுக்கு உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய  இந்த சூரணத்தை தயார்செய்து  தினமும் அதிகாலை வேளை   இரண்டு கிராம் அளவு எடுத்து   சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags